பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தொடரி' படம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி 16 ஆம் தேதி வெளியாகவில்லை. லேட்டஸ்ட் நிலவரப்படி ஒருவாரம் கழித்து, அதாவது 23-ஆம் தேதி தான் வெளியாகிறது. 'தொடரி' படத்தின் சென்சார் நேற்று முடிந்தது. 'யு' சான்று வழங்கியிருக்கிறார்கள்.
கடந்த வாரம் இருமுகன் படத்தை வியாழக்கிழமை வெளியிட்டனர். அதேப்போல் 'தொடரி'யை வருகிற 22-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தொடரியின் தேதி முடிவு செய்யப்படுவதற்கு முன்பே விக்ரம் பிரபு நடித்திருக்கும் வீர சிவாஜி செப்டம்பர் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரசிவாஜிக்கு தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அதை எண்ணி சந்தோஷப்பட்ட தயாரிப்பாளருக்கு அதே தேதியில் தொடரி வெளியாக இருக்கிறது என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஆனாலும் தொடரி ரிலீஸ் தேதியில் வந்தால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால் வீரசிவாஜி தள்ளிப்போகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.