இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்'. வைசாக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மற்ற படங்களைப்போல இல்லாமல் பெண்டு நிமிர்த்தும் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன... ஆனாலும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒகே சொன்ன மோகன்லால் இந்தப்படத்தின் சண்டைப்பயிற்சிகளுக்காக வியட்நாம் சென்று பயிற்சி எடுத்து வந்து நடித்துள்ளாராம். இந்தப்படத்தின் மிக முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கிய பீட்டர் ஹெய்ன், அதில் மோகன்லாலின் வேகம் கண்டு மிரண்டு போனாராம்.
அந்த அளவுக்கு சண்டைக்காட்சியில் டூப் எதுவும் போடாமல் அசத்தியுள்ளார் மோகன்லால். ஆனால் இந்தப்படத்தில் பணியாற்ற ஹாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சண்டைக்கலைஞரான எரிக் நியூவிக் கல்லெட் என்பவரை மோகன்லாலுக்கு டூப்பாக பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருப்பதாக சில செய்திகள் கசிந்தன. படப்பிடிப்பெல்லாம் முடிந்து அக்டோபர்-7ஆம் தேதி படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில், மோகன்லால் டூப் போட்டாரா என்பது பற்றி பதிவிட்டுள்ளார் எரிக்..
அதில் “நான் மோகன்லாலின் ரசிகனோ அல்லது அவருக்கான டூப்போ அல்ல. புலிமுருகன் படத்தில் சண்டைக்கலைஞராக பணியாற்ற வந்த சண்டை கலைஞன்.. ஆரம்பத்தில் மோகன்லால் யார் என்றே எனக்கு தெரியாது. காரணம் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பணிபுரிந்தவன் நான். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது, 56 வயதான மோகன்லால் சண்டைக்காட்சிகளில் காட்டிய ஈடுபாடு என்னை திகைக்க வைத்து விட்டது.. அவர் ஒரு காட்சியில் கூட டூப் போடவில்லை.. அவர் மீது குற்றம் சொல்பவர்களே.. கவனியுங்கள்.. இந்த வயதில் உள்ள உங்கள் தந்தையோ, ஏன் குற்றம் சொல்லும் நீங்களோ கூட அவர் செய்துள்ள விஷயங்களில் ஒரு துளியளவு கூட செய்ய முடியாது.. அவ்வளவு ஏன்.. நானே சிரமப்பட ஒரு ஸ்டெப்பை மோகன்லால் அசாத்தியமாக செய்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.. அந்த கலைஞனுக்கான உண்மையான மரியாதை, இந்தப்படத்தை நீங்கள் பார்த்து அவரின் வேகத்தை ரசிப்பதுதான்” என உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிட்டார் மனிதர்...