ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காவிரி விவகாரத்தால் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபுதேவா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மோதல் சம்பவங்கள் உருவாகியுள்ளது. கர்நாடகாவில், தமிழக வாகனங்கள், கடைகள், தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதேப்போல் தமிழகத்திலும் கர்நாடக வாகனங்கள், கடைகள், ஹோட்டல்கள், கன்னடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு மாநிலங்களிலும் குறிப்பாக கர்நாடகாவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் பிரபுதேவா, ரமேஷ் அரவிந்த ஆகியோரின் சென்னை வீடுகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.