ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சுதந்திரப்போராட்ட வீரராக தனது 151வது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு விரும்பிய சிரஞ்சீவி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். அதன்படி தனது 150வது படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்ட சிரஞ்சீவிக்கு ஒரு கதையும் திரும்பிதிகரமாக அமையவில்லை. இதனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தார்.
இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கைதி எண் 150 எனும் தலைப்பில் உருவாகும் கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி சுதந்திரப்போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வேடம் ஏற்று அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தசரி கிரண் குமார் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதாம்.