குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
பாலிவுட்டில் தனித்துவமான படங்கள் எடுப்பத்தில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் நீரஜ் பாண்டே ஒருவர். தற்போத இவர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "எம் எஸ் தோனி". இப்படம் கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தில் ஏன் உங்களது ஆஸ்தான ஹீரோ அக்ஷய் குமாரை நடிக்க வைக்கவில்லை என்று கேட்டதற்கு நீரஜ் பாண்டே பதிலளித்தாவது...
""எம் எஸ் தோனி" படத்தில் அக்ஷயை நடிக்க வைப்பது எனக்கு சரிப்படவில்லை. ஏனென்றால் இப்படத்தில் 16 அல்லது 17 வயது சிறுவனாக நடிக்க அவரால் முடியாது. அதனால் தான் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. மேலும் இப்படம் விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல் பற்றியும், நாட்டுப்பற்று பற்றியும் பேசும் படமாக அமைந்து உள்ளது" என்று கூறியுள்ளார்.
"எம் எஸ் தோனி" படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.