ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவைச் சேர்ந்தவர் காயத்ரி. சென்னையில் பிறந்து வளர்ந்ததால் சரளமாக தமிழ் பேசுவார். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு நடிப்பு வாய்ப்பு தேடியவருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது ஒறுத்தல் என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
ஒறுத்தல் படத்தில் செந்தில் ஜெகதீசன் என்ற புதுமுகம் காயத்ரி ஜோடியாக நடிக்கிறார். ஜித்தேந்தர் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். பில்லா போஸ் வில்லன். கிருஷ்ணதாசன் ஜெகதீசன் இயக்கி உள்ளார். சதா சுதர்சனம் இசை அமைத்துள்ளார், ஆஷிஸ் தேவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் ஜெய் ஆகாஷ் வெளியிடுகிறார்.
ஹீரோயினாக நடிப்பது பற்றி காயத்ரி கூறியதாவது: நான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பெண்ணாக வளர்ந்தவள். சின்ன வயதிலிருந்தே நடிப்புதான் என் கனவு. இதற்காக நடனம், நடிப்பை முறைப்படி கற்றுக் கொண்டேன். டூரிங் டாக்கீஸ் ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வானேன். அதில் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் பெரிய இயக்குனரின் படம் என்பதால் நடித்தேன். அதன் பிறகு வந்த வாய்ப்புகளில் எனக்கேற்ற கேரக்டர் அமையவில்லை.
இப்போதுதான் அமைந்திருக்கிறது. ஒறுத்தல் படத்தில் கதை என்னைச் சுற்றித்தான் நகரும். சைக்கோ ஒருவன் என்னை கடத்தி வைத்துக் கொண்டு துன்புறுத்துவதும், அதிலிருந்து ஹீரோ என்னை காப்பாற்றுவதும்தான் கதை. ஹாலிவுட் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கிடைக்கும் என்ற நம்புகிறேன். என்கிறார் காயத்ரி.