'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைக்கு நயன்தாரா ஒரு இளம் இயக்குனரை காதலிப்பது ஆச்சர்யமாகவும் கொஞ்சம் பொறாமையுடனும் பார்க்க வைத்திருக்கிறது. ஆனால் புகழின் உச்சியில் இருந்தபோதே ஒரு உதவி இயக்குனரை மணந்து ஆச்சர்யப்படுத்தினார் பானுமதி.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பானுமதியின் கால்ஷீட்டுக்காக காத்து கிடந்தனர். கதை பிடித்தால்தான் நடிப்பார், ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பார். இப்படி பல நிபந்தனைகளோடு வலம் வந்தவர். முதன் முதலாக ஒரு நடிகைக்காக படம் ஒடியது என்றால் அது பானுமதிக்காகத்தான். அப்படி இருந்தும் பானுமதிக்கு காதல் பிறந்தது உடன் நடித்த நடிகர்கள் மீதோ, பெரும் பணக்காரர்களாக இருந்த தயாரிப்பாளர்கள் மீதோ. அல்லது கோடீஸ்வர தொழில் அதிபர்கள் மீதோ அல்ல. ஒரு சாதாரண துணை இயக்குனர் மீது.
கிருஷ்ணபிரேமா என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் படத்தில் உதவி இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணா, பானுமதியை கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தார். பானுமதிக்கு உடைகளை தேர்வு செய்து கொடுப்பது. சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பது. வசனங்களை மனப்பாடம் செய்ய உதவுவது அவரது வேலை. அவரது சுறுசுறுப்பையும், அக்கறையையும் கண்ட பானுமதிக்கு அவர் மீது காதல் பிறந்தது.
ஒரு டாப் நடிகை, ஒரு துணை இயக்குனரை மணப்பதா என்று பானுமதியின் பெற்றோர்கள், உறவினர்கள் இவர்கள் காதலை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி ராமகிருஷ்ணாவை திருமணம் செய்தார் பானுமதி. தயாரிப்பாளர் ஏ.ராமய்யாவின் மனைவி கண்ணாமணி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்தார். சில வருட இடைவெளிக்கு பிறகு தயரிப்பாளர் பி.என்.ரெட்டி ஸ்வர்க்கசீமா என்ற படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் வேறு யார் நடித்தாலும் படம் எடுபடாது என்ற அவரை வற்புறுத்தி நடிக்க வைத்தார். பின்னர் கணவர் அனுமதியுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.