ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக இருந்த வைகறை பாலன் இயக்கி உள்ள படம் கடிகார மனிதர்கள். இதில் கன்னட நடிகர் கிஷோர் ஹீரோவாக நடித்துள்ளார். கிரிஸ்ட் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் சார்பில் கே.பிரவிஷ், கே.பிரதீஷ் ஜோஸ் தயாரித்துள்ளனர். இதில் கிஷோருடன் லதாராவ், கருணாகரன், ஷெரீன் ஆகியோர் நடித்துள்ளனர். சங்கர் நாராயணன் இசை அமைத்துள்ளார். வாடகை வீட்டில் குடியிருக்கும் நடுத்தர மக்களின் கதை.
இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டம் பற்றி பேசப்பட்டது. இதனை தொடங்கி வைத்தார் முன்னாள் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். அவர் பேசியதாவது:
கலைஞர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அவர்கள் தங்களை அரசியலுக்குள் வைத்துக் கொள்ளக்கூடாது. வந்தாரை வாழ வைக்கும் பூமி இது. இந்த படத்தின் ஹீரோ கர்நாடகாவைச் சேர்ந்தவர், தயாரிப்பாளர் மலையாளி, இயக்குனர் தமிழர் இதுதான் இந்தியா, இதுதான் தமிழ்நாடு.
கன்னட நடிகர் ராஜ்குமாரை வேட கண்ணப்பன் படத்தில் அறிமுகப்டுத்தியதே ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் என்கிற தமிழர்தான். அவர் அறிமுகப்படுத்தியதால்தான் அவர் கன்னட சூப்பர் ஸ்டார் ஆக முடிந்தது. இப்படி நாம் வளர்த்தவர்கள்தான் இன்றைக்கு நமக்கு எதிராக நிற்கிறார்கள். காவிரி நீரை தரக்கூடாது என்று அங்குள்ள கலைஞர்கள் சொல்கிறார்கள். நீங்கள் கலைஞர்கள் இதைப் பேச வேண்டாம். இரு மாநில அரசியல்வாதிகள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள், திரைப்பட கலைஞர்கள் காவிரி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்றார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ் காவிரி பிரச்சினை பற்றி பேசினாலும் பிரச்சினை, பேசாவிட்டாலும் பிரச்சினை என்ற நிலைதான் உள்ளது. கர்நாடக கலைஞர்கள் எப்படி பேசுறாங்க பார்த்தீங்களா நீங்க என்ன பண்ணுனீங்கன்ன நம்மை கேட்கத்தான் செய்வார்கள். நம்மை விடுங்க. கர்நாடகாவுலேருந்து வந்து இங்கு சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிற ரஜினிக்கு எவ்வளவு தர்மசங்கடமான பிரச்சினை. காவிரி பிரச்சினையை அமைதியான வழியில் பேசி தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி. என்றார்.