டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காவிரி விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு, நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கும், என, அதன் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார். நடிகர் சங்க செயற்குழு கூட்டம், நேற்று, தி.நகரில், உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
கூட்ட முடிவில், தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால் அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில், தமிழக அரசு சட்டப்பூர்வமாக போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் மூலம், தண்ணீர் பெற்றுத் தந்த, தமிழக அரசை, நடிகர் சங்கம் பாராட்டுகிறது. இந்த பிரச்னையில், தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும், நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும்.
காவிரி விவகாரத்தில், தீவிரமாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை, கர்நாடகத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டது சரியல்ல. அம்மாநில நடிகர்கள், தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, அநாகரிகமாக நடந்து கொண்டதை தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் போலவே, நாமும் போராடலாம். ஆனால், அது ஏற்புடையது அல்ல. நடிகர் சங்கம் மட்டுமே, காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்துவதை விட, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் சேர்த்து போராட்டம் நடத்தினால் தான், அது வலுவான எதிர்ப்பாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். விரைவில், அறிவிப்பு வெளியாகும். சிலர் விளம்பரத்திற்காக, நடிகர் சங்கம் மீது ஊழல் புகார் சொல்கின்றனர். இங்கே, குண்டூசிக்கும் கூட கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும், கணக்கு வழக்குகளை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.