இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
காவிரி விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு, நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கும், என, அதன் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார். நடிகர் சங்க செயற்குழு கூட்டம், நேற்று, தி.நகரில், உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
கூட்ட முடிவில், தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால் அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில், தமிழக அரசு சட்டப்பூர்வமாக போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் மூலம், தண்ணீர் பெற்றுத் தந்த, தமிழக அரசை, நடிகர் சங்கம் பாராட்டுகிறது. இந்த பிரச்னையில், தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும், நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும்.
காவிரி விவகாரத்தில், தீவிரமாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை, கர்நாடகத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டது சரியல்ல. அம்மாநில நடிகர்கள், தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, அநாகரிகமாக நடந்து கொண்டதை தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் போலவே, நாமும் போராடலாம். ஆனால், அது ஏற்புடையது அல்ல. நடிகர் சங்கம் மட்டுமே, காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்துவதை விட, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் சேர்த்து போராட்டம் நடத்தினால் தான், அது வலுவான எதிர்ப்பாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். விரைவில், அறிவிப்பு வெளியாகும். சிலர் விளம்பரத்திற்காக, நடிகர் சங்கம் மீது ஊழல் புகார் சொல்கின்றனர். இங்கே, குண்டூசிக்கும் கூட கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும், கணக்கு வழக்குகளை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.