அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
உண்மை தான்.. மோகன்லால் நடித்த 'ஒப்பம்' மற்றும் பிருத்விராஜ் நடித்த 'ஊழம்' என இரண்டு பெரிய படங்களும், போதாக்குறைக்கு விக்ரம் நடித்த 'இருமுகன்' படமும் கடந்த வாரம் வெளியானதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் திலீப் நடித்த 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' மற்றும் குஞ்சாக்கோ போபன் நடித்த 'கொச்சவ்வா பவுலோ அய்யப்பா கோயில்ஹோ' என மற்ற இரண்டு படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது.. சிக்கல் என்றால், அதிக தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் திலீப், குஞ்சாக்கோ இருவரும் தங்களது படங்களை ரிலீஸ் பண்ணமாட்டார்கள் என்றே சொல்லப்பட்டு வந்தது.. ஆனால் திலீப்பை பொறுத்தவரை ஓணம் பண்டிகையன்று படத்தை வெளியிடுவதை ஒரு கௌரவமாக நினைப்பவர். அதனால் எத்தனை தியேட்டர்கள் கிடைத்தாலும் பரவாயில்லை என படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். அதேபோல குஞ்சாக்கோ போபன், தனது தாத்தா காலத்தில் அவர் உருவாக்கிய உதயா பிக்சர்ஸ் நிறுவனத்தை பலவருடங்கள் கழித்து மீண்டும் துவங்கி அதில் தயாரித்துள்ள முதல் படம் என்பதால், ஏற்கனவே குறித்த தேதியில் ஓணம் பண்டிகை ரிலீஸாக ரிலீஸ் செய்துவிட்டார்.