அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா, அவரது தந்தையும் மறைந்த மூத்த நடிகருமான நாகேஸ்வர ராவ் காலத்தில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார். திரைக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே நாகார்ஜூனா சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார். இன்றும் மாறுபட்ட கதைகளையே நாகார்ஜூனா தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
நாகார்ஜூனாவின் மகன் அகிலின் முதல் படமே படுதோல்வி அடைந்தது. இதனால் முதல் படத்தில் நடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அடுத்த படம் குறித்து அகில் இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பெல்லி சூப்பலு திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. சிறிய பட்ஜெட்டில் முதல் படத்தையே வெற்றிப் படமாக்கி அப்படத்தின் இயக்குனர் தருண் பாஸ்கரை தனது மகனுக்கு ஏற்ற கதையை தயார் செய்யுமாறு கூறியுள்ளார். தருணும் அகிலுக்கு ஏற்ற கதையை தயார் செய்து வருகின்றாராம்.