டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து ஜூலை மாதம் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கமலுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதனையடுத்து டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் கமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டது. தனக்கு விருது கிடைத்ததற்கும் கமல், வாட்ஸ்ஆப்பில் ஆடியோ மூலம் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது உடல்நிலை குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், நவம்பர் மாதம் முதல் எனது வேலைகளை தொடர்வதற்கு நான் உடல்தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். அனைவரின் அன்பினால் விரைவில் குணமடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. அதே காதலுடன் நாயுடு, குண்டு மற்றும் பல படங்களின் வாயிலாக திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார்.