‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் பிரபல நடிகர் கபில் சர்மா. காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சி மூலம் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர். சமீபத்தில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் கடந்த ஐந்து வருடங்களாக, 15 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய அலுவலகத்தை உருவாக்குவதற்காக 5 லட்ச ரூபாயை மும்பை மாநகராட்சிக்கு லஞ்சமாக தர வேண்டியிருக்கிறது, இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா...? என்று பதிவிட்டிருந்தார். கபில் சர்மாவின் இந்த பதிவு மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இதனிடையே கபில் சர்மா, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், முறைகேடாக இவர் வீடு கட்டியிருந்ததாக கூறி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு கபில் பதில் தரவேயில்லை. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முறைகேடாக கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். அதன் வெளிப்பாடாகத்தான் கபில் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பல்வேறு விதமான முறைகேடு புகார்கள் கபில் மீது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தன்னை நல்லவர் போல் காட்டிக்கொண்ட கபில் சர்மா, இப்போது பல்வேறு கட்டட விதிமீறல் புகார்களால் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறார்.