இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பிறந்த ஊர் மக்கள் தொடங்கி ஜனாதிபதி வரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இதுதவிர ஏராளமான பரிசுத்தொகைகளும் குவிந்து வருகிறது. தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ.75 லட்சமும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ், தன் பங்கிற்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.