பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திருப்பூர் மணி(வயது 76), உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் சத்யராஜின் திரைப்பயணத்தில் முக்கிய நபராக இருந்தவர் திருப்பூர் மணி. வண்டிசக்கரம் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவரும் இவர் தான். விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் விஜயகாந்த் நடித்த ‛ஈட்டி, சிவக்குமாரின் 100வது படமான ‛ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ‛ஆணிவேர், ‛வண்டிச்சக்கரம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.
சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவால் இன்று(செப்.,10ம் தேதி) காலமானார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், விவேகானந்தன், பிரேமானந்தன் என்ற மகனும் உள்ளனர். மணியின் மரண செய்தியை அறிந்து நடிகர் சத்யராஜ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாலையில் அவரது இறுதிசடங்குகள் நடக்கிறது.