ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் அக்ஷ்ய் குமார் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ‛ஸ்பெஷல்-26', ‛பேபி' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர், அந்த படங்களும் வெற்றி பெற்றன. தொடர்ந்து படங்களில் இணைய உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அக்ஷ்ய் உடன் இணைந்து பணியாற்ற என்ன காரணம் என்று நீரஜ் பாண்டேவுடன் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பெரிய ஸ்டார் நடிகர் என்பதால் மட்டும் அக்ஷ்ய் குமாருடன் தொடர்ந்து பணியாற்றவில்லை. எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் அதீத நம்பிக்கை இருக்கிறது. நான் எப்பவும் அவரிடத்தில் ஒரு படத்தில் நடிக்க கேட்கும்போதெல்லாம் அந்த ரோலுக்கு அவர் செட் ஆவார் என்பதால் தான் தொடர்ந்து அவருடன் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.