தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து சொல்லியுள்ள நிலையில், அமிதாப், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி வெண்கல பதக்கம் வென்றார். இவர்களுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நாடே மகிழ்ச்சியில் திளைக்கிறது. தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் வருண் சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதேப்போன்று திரையுலக பிரபலங்களான அமிதாப்பச்சன், சூர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம், இயக்குனர் மோகன் ராஜா, இசையமைப்பளர் தமன், பாடகி சின்மயி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசு மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு தொகையும், இந்திய விளையாட்டு துறை ரூ.75 லட்சம் லட்சமும் பரிசுத் தொகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.