ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுண்டமணி நாயகனாக நடித்த 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்கள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கேரக்டர் ரோலில் நடித்த வாய்மை படமும் ரிலீசானது. இந்த படங்களில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருந்தது. என்றாலும், சினிமா வட்டாரங்களில் அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. எதிர்பார்த்தபடி ஓப்பனிங் கிடைக்காததால் படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
விளைவு, அடுத்தபடியாக கவுண்டமணியிடம் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்த சில இளவட்ட டைரக்டர்கள் இப்போது அவரை நெருங்க தயங்கி நிற்கின்றனர். அதுபற்றி அவரிடம் கதை சொல்லியிருந்த ஒரு டைரக்டர் கூறுகையில், நான் சொன்ன கதையில் நடிக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அந்த படத்தை தயாரிப்பதாக சொல்லியிருந்தவர் இப்போது பின்வாங்கி நிற்கிறார் என்கிறார். ஆக, மீண்டும் கவுண்டமணி ஹீரோவாக நடிப்பதற்கான சூழ்நிலைகள் குறைந்து கொண்டு வருவதாக தெரிகிறது.