தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த 'இருமுகன்', பல சீனியர் நட்சத்திரங்களுடன் சாந்தனு நடித்த 'வாய்மை' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியாகின.
விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் 'லவ்' என்ற வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் விக்ரம் நடித்துள்ளதால் அந்த எதிர்பார்ப்பு. ஆனால், அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை. முதலில் அப்படி ஒரு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டதற்கான அழுத்தமான காரணம் எதுவும் படத்தில் இல்லை. இருந்தாலும் நேற்றைய முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்ததாகவே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'வாய்மை' படம் ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் மட்டுமே இருந்தது பெரிய ஆறுதல். அந்த அளவிற்கு அனைவரும் பேசிப் பேசியே கொல்கிறார்கள் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு அடைத்த ஹாலுக்குள் 12 கதாபாத்திரங்கள் மாறி மாறி பேசிக் கொண்டு 'கில்ட்டி, நாட் கில்ட்டி' என வாக்கெடுத்தே படத்தை நகர்த்துகிறார்கள். 'வாய்மை' எனப் பெயர் வைத்ததன் அர்த்தம் புரிகிறது, அந்த 'வாய்' மூலம் பேசிப் பேசியே திணற வைத்தால்தான் என்னவோ அப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தியேட்டர் வாசல் வரையாவது ரசிகர்கள் இந்தப் படத்திற்கு வருவார்களா என்பது சந்தேகம்தான்.