அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இத்தனை நாட்கள் பொறுமை காத்துவந்த மலையாள நடிகர் திலீப், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துள்ளார்.. எந்த விஷயத்தில்..? தனது திருமணம் குறித்த வீண் வதந்தி பரப்பப்படும் விவகாரத்தில்.. அவருக்கும் காவ்யா மாதவனுக்குமான நட்பு குறித்தும் தவறாமல் பத்திரிகைகளில் செய்திகள் இடம்பெறுவது வாடிக்கை தான். அது எல்லை மீறாமல் இருந்தாவரை பிரச்சனையில்லை.. ஆனால் இப்போது இந்த விவகாரத்தில் தனது மகள் மீனாட்சியின் பெயரையும் தேவையில்லாமல் சில மீடியாக்கள் பொதுவெளியில் இழுத்துவிடுவதை திலீப் வன்மையாக கண்டித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் இன்னொரு திருமணம் செய்யவேண்டுமென்றால் அதற்கு என் மகளிடம் தான் அனுமதி கேட்கவேண்டும்” என பட்டும் படாமல் கூறியிருந்தார் திலீப்.. சில இணையதள இதழ்கள், “அப்படியானால் உங்கள் மகள் சம்மதம் சொல்லிவிட்டால் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொள்வீர்களா..? உங்கள் மகள் சம்மத்ததுக்காக காத்திருக்கிறீர்களா” என்கிற ரீதியில் விஷயங்களை கொஞ்சம் அதிகப்படியாக திரித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..
இதனால் கோபமான திலீப் தனது முகநூல் பக்கத்தில், இது குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், “இதுநாள் வரை என்னைப்பற்றி வந்த செய்திகளை நான் பொறுமையாக எதிர்கொண்டு வருகிறேன்.. ஆனால் இந்த விஷயத்தில் என் மகள் பெயரை இழுத்துவிடுவதை என்னால் அனுமதிக்க முடியாது.. அவர் இந்த வாழ்க்கையில் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.. அவர் மீது மீடியா வெளிச்சத்தை பாய்ச்சாதீர்கள்.. எனது படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையே கிடைக்கும் இடைவெளிகளில் நான் இந்த சமூகத்துக்கு செய்யும் நல்ல விஷயங்களுக்கு ஊடகங்கள் பலவும் ஆதரவு தந்துவருகின்றன.. ஆனால் சிலர் மட்டும் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாக நடந்துகொள்கிறார்கள்.. அவர்களை எச்சரிக்கிறேன்” என திலீப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார