'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி' படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தவர்தான் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் விஷாலின் 'கதகளி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த இவர், புகழ்பெற்ற மலையாள நடிகர் டி.ஜி.ரவியின் மகன் ஆவார்.. சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை காட்டி அவர்களிடம் அத்து மீறியதாக நடிகர் ஸ்ரீஜித் ரவி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரித்துவந்த சிவில் போலீஸ் அதிகாரியான ராஜசேகரன் என்பவர் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான விசாரணைக்கும் ஆளாகியுள்ளார்..
நடிகர் மீது புகார் கொடுத்த பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரணையில் அவர் கடுமை காட்டி ஒருதலை பட்சமாக நடந்துகொண்டதாகவும், இவரது நடவடிக்கையால் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் காரணம் சொல்லபடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நேரடியாக கலெக்டரிடம் சென்று புகார் அளிக்க, அதன்பின்னர்தான் இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் இந்த அதிகாரி.. மேலும் இந்த வழக்கு பற்றி விசாரித்துவரும் போலீஸார், நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு போதைப்பழக்கம் உள்ளதா என்கிற ரீதியில் விசாரித்து வருகின்றன.