இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரையில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். நெல்லை தமிழில் பேசி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர், சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படத்திற்கு பிறகு பல படங்களில் தனி காமெடியனாக நடித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி இமான் அண்ணாச்சியின் கைவசம் பத்து படங்கள் உள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நகைச்சுவை மூலம் ரசிகர்களை சந்தோசப் படுத்த வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக உள்ளது. அதனால், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். அதோடு, குணசித்ர வேடங்களை விட காமெடி வேடங்களில் நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அந்த வகையில் தற்போது பத்து படங்களில் காமெடியனாக நடிக்கிறேன். இந்த படங்கள் ஒவ்வொன்றிலுமே எனக்கு அதிகப்படியான காமெடி காட்சிகள் உள்ளன. அதோடு காமெடியில் எனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கவும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.