மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
‛மனிதன்' படத்திற்கு பிறகு பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தற்போது எழில் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்கால் பகுதியில் நடந்து வருகிறது. இதையடுத்து ‛தூங்காநகரம்' கெளரவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் உதயநிதி. தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் தளபதி பிரபு இயக்குகிறார். இவர் விக்ரமன் மற்றும் பொன்ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
தளபதி பிரபு சொன்ன கதை உதயநிதி மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு பிடித்து போக அவரையே இயக்குநராக்கி விட்டார்கள். இப்படத்தில் உதயநிதியுடன் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். அது எந்தமாதிரியான ரோல் என்று தெரியவில்லை. அனேகமாக அவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது. உதயநிதி ஜோடியாக நிவேதா பெத்ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். வருகிற செப்.,19ம் தேதி முதல் தேனியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.