மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த ஒரு வருடமாக மோகன்லாலின் படங்கள் எதுவும் ரிலீசாகாமல் மோகன்லால் ரசிகர்கள் கிட்டத்தட்ட துக்கம் அனுஷ்டித்து வந்தார்கள் என்றே சொல்லலாம்... தோசை ஊற்றினால் ஒன்றொன்றாகவாவது சரியான இடைவெளியில் கிடைத்துக்கொண்டு இருக்கும்.. ஆனால் இட்லி ஊற்றினால் லேட்டாகும்.. ஆனால் மொத்தமாக கிடைக்கும்.. அப்படித்தான் இப்போது மோகன்லாலின் படங்கள் தொடர்ந்து வெளியாவதால் மகிழ்ச்சி மழையில் உற்சாகமாக நனைந்து வருகிறார்கள்.. கடந்த மாதம் மோகன்லால் தெலுங்கில் நடித்த 'மனமந்தா' மலையாளத்தில் விஸ்மயம்' ஆக டப்பிங் ஆகி சோர்ந்து போயிருந்த அவரது ரசிகர்களை ஆரம்பகட்ட உற்சாக நிலைக்கும் கொண்டு வந்தது..
கடந்தவாரமும் மோகன்லால் தெலுங்கில் நடித்த 'ஜனதா கேரேஜ்' படம் வெளியானது.. இந்த வாரம், அதாவது நாளை பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'ஒப்பம்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இதில் மோகன்லால் கண்பார்வையற்றவராக நடித்திருக்கிறார் என்பதுடன் இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்தது என்பதும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன..
இதற்கெல்லாம் மேலாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும், மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிவரும் மோகன்லாலின் 'புலிமுருகன்' படமும் வரும் அக்-7ஆம் தேதி ரிலீஸாக இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.. அந்தவகையில் பார்த்த கடந்த வாரத்தில் இருந்து, வரும் அக்-7ஆம் தேதிக்குள் அதாவது 35 நாட்களுக்குள் மோகன்லாலின் மூன்று படங்கள் வெளியாவது நிச்சயம் ஒள்று சாதனை விஷயம் தான்.