டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
அழகும், திறமையும் வாய்ந்த நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியை தான் கொடுத்து வருகின்றன. இந்தச்சூழலில் இவரது நடிப்பில் செப்., 9-ம் தேதி(நாளை) வெளியாக உள்ள படம் ‛‛பார் பார் தேக்கா . இப்படத்தை பெரிதும் நம்பும் கத்ரீனா, இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், இப்படம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
பார் பார் தேக்கோ படம் பற்றி சொல்லுங்க?
பார் பார் தேக்கோ படம் முற்றிலும் புதுமையான ஒரு ரொமான்ட்டிக் படம். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு படமாக இருக்கும். இன்றைய தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு இடையேயான காதல் உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப்படம் பேசப்போகிறது. இன்றைக்கு உறவுகளை விட அவர்களின் வேலை தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம், அதனால் ஏற்படும் பிரச்னைகள் இந்த படம் பிரதிபலிக்கும்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
டில்லியில் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக, தியா எனும் ரோலில் நடிக்கிறேன். தியா, குடும்பத்திற்கா? அல்லது தன்னுடைய பணிக்கா? எதற்கு முன்னுரிமை தருகிறாள் என்பதை படத்தில் பார்க்கும்போது தெரியும். படம் பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் தங்களை தியாவாக உணருவார்கள், அதேப்போன்று ஒவ்வொரு ஆண்களும், சித்தார்த் கேரக்டரை உணருவார்கள். இப்படியொரு படத்தில் நடித்தது மகிழ்ச்சி, பெருமை.
சீனியர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த நீங்கள், இப்போது இளம் நடிகர்களுடன் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்க?
அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான், அக்ஷ்ய் குமார், பாபி தியோல் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். ஆனால் இப்போது சித்தார்த் மல்கோத்ரா, ஆதித்யா ராய் கபூர் போன்ற இளம் நடிகர்களுடன் நடிக்கிறேன். என்னை பொறுத்தவரை பெரிய நடிகர், சின்ன நடிகர் யாராக இருந்தாலும் சரி அவர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தை கற்று கொள்ள முடியும். எல்லா நடிகர்களையும் நான் சமமாகத்தான் மதிப்பேன். அக்ஷ்ய் குமாருடன் அதிக படங்களில் நடித்திருப்பதால் அவரிடம் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன்.
இந்தப்படத்தில் நடிக்க எது உங்களை ஈர்த்தது?
நான் எப்போதும் கதைக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். கதையை முதலில் கேட்பேன், பின்னர் அதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா என்று யோசிப்பேன். இந்தப்படமும் அப்படித்தான், கதை தான் என்னை ஈர்த்தது. ஒரு படத்தின் வெற்றியை 60 சதவீதம் தீர்மானிப்பது கதை தான். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான். என்னுடைய சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லை என்று ஒத்து கொள்கிறேன், இதனால் வருத்தமும் அடைந்தேன். ஆனால் அடுத்தடுத்த படங்களில் நான் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் நடிக்கிறேன்.
நட்சத்திர அந்தஸ்து சில சமயம் சங்கடங்களையும் தரும், அதை எப்படி எடுத்து கொள்வீர்கள்?
பொதுவாக கிசுகிசுக்கள் போன்ற விஷயங்களை எல்லாம் நான் ஒரு பொருட்டாகவே கருதமாட்டேன். இது என்னுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒரு செய்தி நல்லதோ, கெட்டதோ அது தொடர்பான விளக்கத்தை எனது செய்தி தொடர்பாளர் மூலமாகவோ அல்லது ஏதாவது பத்திரிகை வாயிலாக தெரிவிப்பேன். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் இருக்கத்தான் செய்யும், அதை எண்ணி கவலைப்படாமல் அதை தகர்தெறிந்து முன்னேறி செல்ல வேண்டும்.
மற்ற ஹீரோயின்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கிறீர்களா?
இன்றைக்கு வெளியூரை சேர்ந்த நடிகைகளுக்கு நான் முன்மாதிரியாக இருக்கிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் ரசிகர்கள் தான் காரணம். ஹிந்தி தெரியாமல், இங்குள்ள கலாச்சாரம் சார்ந்திராத எண்ணை ரசிகர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என்றால், ரசிகர்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இது வேறு எந்தவொரு நடிகைக்கும் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கத்ரீனா கைப் கூறியுள்ளார்.