‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள திரையுலகை சேர்ந்த சில தயாரிப்பளர்களும் நடிகர்களும் கொஞ்சம் மனக்குமுறலில் தான் இருக்கிறார்கள்.. குறிப்பாக குஞ்சாக்கோ போபன் மற்றும் திலீப் இருவரும்.. அதிலும் யார்மீது..? 'விகரம் மீதும் அவர் நடித்துள இருமுகன் படம் மீதும்.. ஆம் திலீப் தான் நடித்துள்ள 'வெல்கம் டூ சென்டரல் ஜெயில்' படத்தையும் குஞ்சாக்கோ போபன் தான் நடித்துள்ளதோடு, நீண்ட நாட்கள் கழித்து தங்களுடைய உதயா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் 'கொச்சவ்வா பவுலோ அய்யப்போ கோயில்ஹோ' என்கிற படத்தையும் இந்த ஓணம் பண்டிகை ரிலீஸாக நாளை (செப்-9) வெளியிட தீர்மானித்து விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இதுதவிர இன்னும் இரண்டு சிறிய படங்களும் ரிலீஸுக்கு முண்டியடித்தன.
ஆனால் சூழல் அதற்கு சாதகமாக இல்லை. காரணம் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஒப்பம்' மற்றும் பிருத்விராஜ்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஊழம்' என இரண்டு பெரிய படங்கள் நாளை வெளியாக உள்ளதால் திலீப், குஞ்சாக்கோ ஆகியோரின் படங்களுக்கு போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. இதில் விக்ரமின் 'இருமுகன்' படம் சேர்ந்துகொள்ள மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரின் பங்கில் இருந்தே சில தியேட்டர்களை பிடுங்கி 'இருமுகன்' படத்துக்கு கொடுத்துவிட்ட கதையும் நடந்துள்ளது.. ஆக நாளை ஆறு படங்கள் வெளியாக இருந்த மலையாள திரையுலகில் வெறும் இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
35 நாட்களில் மோகன்லாலின் 3 படங்கள்..!