தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில், பிசியான நடிகையாக வலம் வந்தவர். அஜித், விஜய் போன்ற இன்றைய சூப்பர் நடிகர்கள் அறிமுகமான படங்களில், ஹீரோயினாக நடித்தவர். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், கொளஞ்சி என்ற படத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்துள்ள சங்கவியுடன் ஒரு சந்திப்பு:
கொளஞ்சி படம் பற்றி சொல்லுங்களேன்...
இது, எனக்கு, 99வது படம். இரண்டு குழந்தைகளுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, இந்த படம் தயாராகியுள்ளது. புஷ்பா என்ற பாசமான அம்மா கேரக்டரில் நடிக்கிறேன். பையன் என்ன தப்பு பண்ணினாலும், அடிக்காத அம்மாவாக நடிக்கிறேன். கடவுள் இல்லை என நினைக்கும் கேரக்டரில், சமுத்திரக்கனி சார் நடிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குனர் தன்ராம் சரவணன் கூறியதுமே, உணர்ச்சிவசப்பட்டேன். படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும் அனைவருக்கும், கண்டிப்பாக, ஒரு சொட்டு கண்ணீர் வரும்.
அஜித், விஜய் இரண்டு பேர் அறிமுக படங்களிலும் நீங்க தான் ஹீரோயின்; அந்த அனுபவத்தை பற்றி...
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தான், அமரவாதி படத்தில், அஜித் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. பள்ளியில் படிக்கும் பெண், எந்த அளவுக்கு நடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு தான் நடித்திருப்பேன். விஜயும், அஜித்தும், இவ்வளவு பெரிய நடிகர்களாக வருவர் என்பது, எனக்கு அப்போது தெரியாது. அவர்களின் கடின உழைப்பும் இதற்கு முக்கிய காரணம்.
விஜய் அப்பா இயக்கத்தில், விஜய் நடிக்கும்போது, அந்த படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் ?
விஜய், இப்போது மட்டுமல்ல; அப்போதும் ரொம்ப அமைதியானவர் தான். ரசிகன், விஷ்ணு, கோயம்புத்துார் மாப்பிள்ளை, நிலவே வா போன்ற படங்களில் அவருடன் நடித்தேன். நண்பர்களிடம் மட்டும் தான் நன்றாக பேசுவார்; மற்றவர்களிடம் பேச மாட்டார். எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரை பார்க்கும்போது, ரொம்ப பயமாக இருக்கும். 'அந்த நடிகையை அடித்தார், இந்த நடிகையை அடித்தார்' என, பேசிக் கொள்வர். இதனால், நானும் பயந்தேன். ஆனால், கடைசிவரை அவரிடம் அடிவாங்கவில்லை. விஷ்ணு படத்தில், ஒரு காட்சியில் குளிர்ந்த நீரில் குதிக்க வேண்டும்; இயக்குனர் கூறியதும், பயந்துபோய், உடனே குதித்து விட்டேன். ஆனால், விஜய் குதிக்கவில்லை. 'அந்த பொண்ணு குதித்து விட்டது; நீ ஏன் குதிக்கவில்லை' என, இயக்குனர் திட்டினார். அப்போது, என்னை பார்த்து, விஜய் ஒரு முறை முறைத்தார் பாருங்கள்; அவ்வளவு தான்.
நீங்க தவறவிட்ட படங்கள் எதுவும் உண்டா?
ஆரம்பகாலத்தில் நிறைய படங்கள் நடித்தேன். எனக்கு தேதி கிடைக்காததால், பல படங்களில் நடிக்க முடியவில்லை. பூவே உனக்காக நான் நடிக்க வேண்டிய படம். தமிழில் நிறைய படங்கள் தவறவிட்டு, அதை வேறு மொழிகளில் நடித்த அனுபவம் இருக்கு.
டாக்டர் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த உங்களை, தொடர்ந்து படிக்கும்படி யாரும் வற்புறுத்தவில்லையா?
என் அப்பா, பிளஸ் 2 முடித்து விட்டு, படிக்க போகும்படி வற்புறுத்தினார். ஆனால், எனக்கு நடிப்பில் ஆசை வந்து விட்டது. அதனால், 9ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போய் விட்டது. நேரம் கிடைத்தபோது, படிக்க ஆசைப்பட்டாலும், குறைந்த மார்க் எடுத்து விடுவோமோ என்ற பயத்தில் படிப்பை கைவிட்டு விட்டேன்.
ஹிந்தியில் போன வேகத்துக்கு திரும்பி வந்திட்டீங்களே; ஏன்?
ஹிந்தியில் நடிக்க வேண்டுமானால், ரொம்ப ஒல்லியாக இருக்க வேண்டும்; ஆனால், எனக்கு சாப்பாட்டை விட்டு கொடுக்க முடியாது; நல்லா சாப்பிடுவேன். அதனால், பாலிவுட் ஆசையை கை கழுவிவிட்டேன்.
உங்க சினிமா தோழிகள் ?
மீனா, ரம்பா, மகேஸ்வரி ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். இப்போதும், அவர்களுடன் நட்பில் இருக்கிறேன். அப்போதெல்லாம், இரண்டு ஹீரோயின் படங்கள் அதிகமாக வந்தன. அதனால், அனைவரும், ஒன்றாக சேர்ந்து, தியேட்டருக்கு போவோம்; ஊர் சுற்றுவோம்.
தாமதமாக திருமணம் செய்தது ஏன் ?