பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கை எண் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மீலூ எவரு கோடீஸ்வரடு எனும் நிகழ்ச்சியை முதலில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். இடையில் நிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மீண்டும் சிரஞ்சீவி தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டால் சிரஞ்சீவி நடத்தும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும்.
சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரது மகன் ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் உருவாகின்றது. காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை விஜயசாந்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம்.