ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நேற்று மும்பை செல்வதற்காக டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்தனர். ஏற்கெனவே அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். விமான நிலைய அனுமதி சீட்டும் பெற்றிருந்தனர். அவர்கள் இருவரும் விமான நிலையத்திற்குள் சென்றதும் அவர்கள் இருவரையும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இருவர் நடிப்பிலும் அடுத்து வெளியாக உள்ள பார் பார் தேக்கோ படம் பற்றி ஆவலாக விசாரித்தனர்.
உற்சாகமடைந்த அவர்கள் ரசிகர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இவர்களுக்காக 10 மணி வரை காத்திருந்தது. ஆனால் இருவரும் வருவதாக தெரியவில்லை. விமானத்தினுள் இருந்த பயணிகள் அவர்களுக்காக காத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி விமானம் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு பறந்தது. பாலிவுட் நட்சத்திரம் என்பதால் நமக்காக விமானம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கும் என்று அவர்கள் நம்பினார்களாம். இதனால் ஏமாற்றம் அடைந்த இருவரும் அதன் பிறகு நள்ளிரவு கிளம்பிய விமானத்தில் ஏறி மும்பை சென்றனர். இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் அதனால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தாகவும் விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.