ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள 'இருமுகன்' படம் தான் இன்றைய தேதியில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம். இந்தப்படம் வருகிற 8 -ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. அதாவது பல வளைகுடா நாடுகளில் வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றைய வசூலை குறிவைத்து வியாழக்கிழமை அன்றே படத்தை வெளியிடுகிறார் 'தமீன்ஸ் ஃபிலிம்ஸ்' ஷிபு தமீன். கேரளத்தில் தானே சொந்தமாக இருமுகன் படத்தை வெளியிடும் ஷிபு தமீன், தமிழகத்திலும் சொந்தமாகவே வெளியிட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க பல பிரபல நிறுவனங்கள் போட்டிபோட்டதாகவும், கடைசியில் சில கோடிகள் கூடுதலாக கோட் பண்ணியதால் 'ஆரா சினிமாஸ்' பட நிறுவனம் கைபற்றியுள்ளது! ஏற்கனவே, 'உப்புகருவாடு', 'உனக்கு என்ன வேணும் சொல்லு', 'மசாலா படம்', 'அஞ்சல', 'ராஜா மந்திரி' ஆகிய தமிழ் படங்களை விநியோகம் செய்தது 'ஆரா சினிமாஸ்'. இந்த படங்கள் அனைத்திலும் சுமார் ஆறு கோடி நஷ்டமாம்.
அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதோடு, லாபத்தையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருமுகன் படத்தின் தமிழக உரிமையை வாங்கியதாம் ஆரா சினிமாஸ். இதற்கிடையில் ஆரா சினிமாஸ் நிறுவனத்திடம் ஆதாயம் பெற விளைந்த சிலருக்கு எதிர்பார்த்து நடக்காமல்போன கடுப்பில் அந்த நிறுவனம் பற்றி அவதூறு பரப்பும் வேலையை செய்து வருகின்றனராம். அதை எல்லாம் முறியடித்து, இருமுகன் படத்தை வெற்றிப்படமாக்கிக் காட்ட வேண்டும் என்பதில் முனைப்புடன் களமிங்கியுள்ளது ஆராஸ் சினிமாஸ்.