'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் இந்தமுறை மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரின் படங்கள் ஓணம் பண்டிகை ரிலீஸ் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டன. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'ஒப்பம், 'ஜீத்து ஜோசப் டைரக்சனில் பிருத்விராஜ் கூட்டணி சேர்ந்து உருவாகியுள்ள 'ஊழம்' என இந்த இரண்டு படங்களும் தான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கின்றன. மோகன்லாலுக்கு ஒரு வருட இடைவெளிவிட்டு மலையாளத்தில் படம் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு டபுள் ஓணம் என்றே சொல்லலாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சில மலையாள படங்களும் ரிலீஸாகின்றன..
இந்த போட்டியில் விக்ரம் நடித்த இருமுகன்' படமும் சேர்ந்துகொண்டுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. மேலும் 'இருமுகன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளதும், கேரளாவை சேர்ந்த விநியோகஸ்தர் சிபு தமீன்ஸ் இந்தப்படத்தை தயாரித்திருப்பதாலும், மோகன்லால், பிருத்விராஜ் படங்களுக்கு இணையாக அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா..? மோகன்லால், பிருத்விராஜ், விக்ரம் மூவரும் நடிப்பில் அகோரப்பசி கொண்டவர்கள்.. இந்த மூவர் படங்களும் ஒரே நாளில் வெளியாவது என்பது ஆச்சர்யம் தான்.