தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இரு இளம் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் வருண் தவான். இவர்கள் இருவரும் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்தனர். அதில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர் . தொடர்ந்து இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் மற்றும் வருணின் நட்பில் விரிசல் விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதுப்பற்றி சித்தார்த்திடம் கேட்ட போது முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... "மக்கள் என்னை எந்த இடத்தில் வைத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி கவலை இல்லை. ஆனால் எனக்கும், வருணுக்கும் இடையேயான நட்பு எப்போதும் மாறாது, எங்கள் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் என்னதான் நட்புடன் இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் இருவரும் வேறு வேறு பாதையில் தான் பயணிப்போம். மற்றபடி நாங்கள் இருவரும் எங்கு பார்த்தாலும் ஒற்றுமையாக இருப்போம். ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை" என்றார்.
சித்தார்த் மல்ஹோத்ரா, தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் பார் பார் தேக்கோ , செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.