ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூடர்கூடம் படத்தை இயக்கி தயாரித்த நவீன் தயாரித்துள்ள படம் கொளஞ்சி. அவரது உதவியாளர் தனராம் சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரகனி கதையின் நாயகன். அவரது நாயகியாக சங்கவி ரீ என்ட்ரி ஆகிறார். இவர்கள் தவிர மூடர்கூடம் ராஜாஜி, கிருபாகரன், ஆதிரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
"13 வயது மகனும், 12 வயது மகனும் தன் தந்தையின் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. தந்தை சமுத்திரகனி தஞ்சை விவசாயி, நாத்திகம் பேசும் கருப்புச் சட்டைக்காரர். அவரது மனைவி சங்கவி. இவர்களது மகன்களாக கிருபாகரன், ரசூல் நடித்துள்ளனர். இந்த இரண்டு மகன்களை பற்றிய கதை. இதில் தஞ்சாவூர் மண் சார்ந்த சாயல் கொண்ட நடிகைகளை நடிக்க கேட்டோம். அவர்கள் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க தயாராக இருந்தும் 13 வயது மகனுக்கு தாயாக நடிக்க விருப்பப்படவில்லை.
இந்த நேரத்தில் சங்கவி கலந்து கொண்ட ஒரு விழாவின் படத்தை பார்க்க நேர்ந்தது. நான் மனதில் உருவாக்கி வைத்திருந்த கேரக்டர் மாதிரியே இருந்தார். அவரை தொடர்பு கொண்டு கேட்டோம். கதையைச் சொல்லுங்கள் பிடித்திருந்தால் நடிக்கிறேன். என்றார் கதை சொன்னோம். "சூட்டிங் பிக்ஸ் பண்ணிட்டு கூப்பிடுங்க வந்துடுறேன்" என்றார். இந்தப் படத்தில் சங்கவின் நடிப்பு பேசப்படும். விருதுகள்கூட கிடைக்கலாம். இது அவருக்கு சினிமாவில் நல்ல திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் இயக்குனர் தனராம் சரவணன்.