டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிக கட்டடம் கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் 10 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஊழல் நடந்ததாக கூறித்தான் சரத்குமார் தலைமையிலான அணியை தேர்தலில் தோல்வி அடைய செய்து வெளியேற்றி, நாசர், விஷால் தலைமையிலான புதிய அணி நிர்வாகத்திற்கு வந்தது. முதல் கட்டமாக அவர்கள் நிலத்தை மீட்டனர். கட்டடம் கட்டுவது தொடர்பாக முடிவெடுக்க தனி குழுவும் அமைத்தனர்.
இந்த குழு நேற்று கூடி கட்டட பணிகள் குறித்து ஆலோசித்தது. இதில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பிரபு, ராஜேஷ், மோகன், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன், ஜசரி கணேஷ், ராஜா, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சங்க கட்டடத்திற்காக வரைபடத்திற்கு குழு அனுமதி அளித்தது. இந்த வரைபடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும், அனுமதி கிடைத்தும் கட்டட பணிகள் தொடங்கும். இந்த கட்டிடம் 5 மாடிகளில் அமைய இருக்கிறது. ஒரு திருமண மண்டபம், ஒரு பிரிவியூ தியேட்டர். ஒரு நாடக அரங்கம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சிகூடம், ஒரு கருத்தரங்க கூடம் ஆகியவை உள்பட பல வசதிகள் இதில் இருக்கும், திட்ட மதிப்பீடு 26 கோடி ரூபாய். ஒரு ஆண்டுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரிவியூ தியேட்டருக்கு ஆகும் செலவை சிவகுமார் குடும்பம் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.