இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்' படம் மிகப் பெரிய வசூலைக் கொடுக்கவில்லை என்றாலும், விஜய்சேதுபதி, நயன்தாரா படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதற்கு தனுஷ் சில பல கோடிகளை செலவு செய்தார் என்று கோலிவுட்டிலேயே கிண்டலாகப் பேசியவர்கள் பலர் உண்டு. படம் முடிந்த பின் இதுவரை தனுஷும், விக்னேஷ் சிவனும் பேசிக் கொள்ளவில்லை. அதைப் பற்றி நேரடியாக தனுஷிடம் கேட்ட போது அவர் மழுப்பலான பதிலையே சொன்னார்.
அடுத்து ஒரு படத்தை இயக்குவதற்கு பல முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசினார் விக்னேஷ் சிவன். அந்த 'வலை' யார் என்பது உங்களுக்கே தெரியும். அஜித், விஜய் இருவரும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதால் விக்னேஷ் சிவன் வீசிய வலையில் அவர்கள் சிக்கவில்லை. சூர்யாவையும் சந்தித்துப் பேசினார், ஆனால் முதலில் சூர்யா தரப்பிலிருந்து அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக பேசி, ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.
சூர்யாவிற்கும் பா.ரஞ்சித், முத்தையா ஆகியோருடன் இணைந்து படம் செய்ய ஒத்துவரவில்லை. கௌதம் மேனனுடன் பேசிய பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக முடியவில்லை. அதனால், அடுத்து ஒரு பெரிய இயக்குனருடன், பிரம்மாண்டமான படம் செய்வதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை எளிமையாக எடுத்து முடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து சூர்யா அவருடைய தயாரிப்பிலேயே நடிக்கும் படம் இது. இனி, சூர்யாவை வேறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்துப் பார்ப்பது நடக்காத விஷயம். அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் சேர்த்தே ஐந்தாறு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. சூர்யாவின் இந்த தொடர் நடவடிக்கை முன்னணி தயாரிப்பாளர்களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்.