ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் ஏ.எல்.விஜய்- அமலாபால் இருவரும் பிரியப்போகிறார்கள் என்றதும், சில கோலிவுட் டைரக்டர்கள் ஒன்றுகூடி அமலாபாலுக்கு படவாய்ப்பு இல்லாமல் செய்து அவரை பீல்டு அவுட்செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டனர். அதன்காரணமாக அமலாபாலுக்கு அடுத்தபடியாக படங்கள் கொடுக்கயிருந்த வர்களிடம் அவரை அந்த படங்களில் இருந்து தூக்கி விடுமாறும் கேட்டுக்கொண்டு வந்தனர். ஆனால், ஏற்கனவே அவரை கமிட் பண்ணியவர்கள் அவரை படத்தில் இருந்து நீக்கவில்லை. குறிப்பாக, வெற்றிமாறனின் வடசென்னையில் அமலாபால் ஏற்கனவே நடித்து விட்டதால் அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தற்போது மேலும் புதிய படங்களில் நடிப்பது குறித்தும் தீவிரமாக இறங்கியிருக்கும் அமலாபால், செலிபிரிட்டி லீக் பேட்மிண்டன் அணியின் ஊக்குவிப்பாளராகவும் இருக்கிறார். இதையடுத்து, தனது வாழ்வில் நடந்த பிரச்சினைகள் எதையும் அவர் மனதில் போட்டுக்குழப்பிக்கொள்ளாமல் பழைய அமலாபாலாகவே முகம் காட்டி வருகிறார். குறிப்பாக, மீடியாக்கள் தன்னை அதிகமாக விமர்சித்தபோதும் அதை அவர் பெருசாக எடுத்துக்கொள்ளாமல் அதே சிரித்த முகத்துடன் பழகி வருகிறார். அதைப்பார்த்து, விவாகரத்து ஆகும் வரை அமலாபால் வெளியில் தலைகாட்டமாட்டார் என்று நினைத்தவர்கள் அவர் எப்போதும் போல் இப்போதும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருப்பதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.