'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குருசுக்ரன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை சாத்னா டைட்டஸ். அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்காதபோதும் அதன்பிறகு விஜய் ஆண்டனியுடன் நடித்த பிச்சைக்காரன் வெற்றிப்படமானது. அதையடுத்து கலையரசனுடன் எய்தவன் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் சாத்னா டைட்டஸ். மேலும் பிச்சைக்காரன் தெலுங்கிலும் ஹிட்டடித்த பிறகு சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லி வருகிறார்களாம். அதனால் தமிழை விட அவரது தெலுங்கு மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்கிறார்கள்.
இந்தநிலையில், தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் நடிக்க சாத்னா டைட்டஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுடன் நடித்து வரும் ஆர்யா, அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக கேரளாவில் முகாமிட்டுள்ளார். விரைவில் அந்த படம் முடியும் தருவாயில் இருப்பதால் அதை யடுத்து அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில்தான் நடிக்கிறாராம்.
அதோடு, ஆர்யாவின் மார்க்கெட் மந்தமாக இருப்பதால் மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் சில நடிகைகளை நடிக்க வைத்தால் வியாபாரரீதியாக உதவிகரமாக இருக்கம் என்று சிலமேல்தட்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள் கேட்ட சம்பளம் பட்ஜெட்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதாம். அதனால் விரலுக்கேற்ற வீக்கமாக இப்போது சாத்னாவை நாடியிருக்கிறார்களாம்.