கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
தமிழ் சினிமாவில் யார் அதிக வேடங்களில் நடித்திருக்கிறார்கள் என்று கேட்டால் எல்லோருமே சிவாஜி 9 வேடங்களில் நவராத்திரி படத்தில் நடித்தார். கமலஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் என்று பதில் சொல்வார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் திகம்பர சாமியார் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்திருக்கிறார்.
வடுவூர் துரைசாமி அய்யங்கார் என்ற என்ற எழுத்தாளர் எழுதிய திகம்பர சாமியார் என்ற துப்பறியும் நாவலை மார்டன் தியேட்டர்ஸ் படமாக எடுத்தது. அப்போது வில்லன் நடிகராக வளர்ந்து வந்த எம்.என்.நம்பியாரை ஹீரோவாக்கியது.
1950ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் முதலில் திகம்பர சாமியராக நடித்தது காளி என்.ரத்னம். பாதி படம் முடிந்த நிலையில் அவரது நடிப்பில் திருப்பி வராத மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் எம்.என்.நம்பியாரை நடிக்க வைத்தார். நம்பியார் திகம்பர சாமியாராக நடித்து அதில் 12 வேடங்கள் போட்டார்.
வடிவாம்பாள் என்ற இளம்பெண்ணை வழக்கறிஞர் சட்டநாதம் பிள்ளை என்பவர் கடத்தி கொண்டு வந்து வைத்துக் கொண்டு தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பார். அந்த பெண்ணை கண்டுபிடித்து காதலனோடு சேர்த்து வைப்பதுதான் திகம்பர சாமியாரின் வேலை. அவரை கண்டுபிடிப்பதற்குத்தான் நம்பியார் 12 வேடங்கள் போடுவார்.
திகம்பர சாமியாரை டி.ஆர்.சுந்தரம் இயக்கி, தயாரித்தார், நம்பியாருடன் டி.பாலசுப்பிரமணியம், பி.வி.நரசிம்ம பாரதி, எம்.ஜி.சக்கரபாணி, வி.கே.ராமசாமி, திரவுபதி, சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்திருந்தனர். ஜிராமநாதன் இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து நம்பியார் ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லனாகத்தான் நடித்தார்.