டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான வின்செண்ட் அடைக்கலராஜ் கணேஷ் 365 என்ற விநாயகர் கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27ந் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியில் விநாயகரின் 365 அவதாரங்கள் ஓவியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையட்டி குழந்தைகளுக்கான விநாயகர் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கவும், விநாயகர் கண்காட்சியை பார்வையிடவும் நடிகை கவுதமி நேற்று வந்தார். அவர் கண்காட்சியை சுற்றிப் பார்த்தார். வெற்றி பெற்ற குழந்தைகளுக்க பரிசு மற்றம் சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:
கலை என்பது ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் அது பொதுவானது. இப்படிப்பட்ட அற்புதமான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கலையின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்த கணேஷ் 365 என்னும் முயற்சியை எடுத்த வின்சென்ட் சாருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறினார் கௌதமி. இந்த கணேஷ் 365 ஓவியக்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது கவுதமி நடத்தி வரும் லைப் அகைன் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.