ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் தனுஷ் புதிய படம் தயாரிப்பதாக அறிவித்ததும் அதற்கான ஆரவாரங்கள் எழுந்து தற்போது அடங்கிய நிலையில், ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்கிற அடுத்த விவாதம் ஆரம்பமாகிவிட்டது.. இதில் பலரும் கோரஸாக சொல்லும் பதில் 'அமலாபால்' என்பதுதான்.. யாரோ ஒரு ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த வாய்ப்பு, நன்றாக அறிமுகமான அமலாபாலுக்கு கிடைக்காதா என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் காரணம்.. ஆனால் தனது காதலரான ஏ.எல்.விஜய்யின் புண்ணியத்தால் விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டாலும், ரஜினியுடன் நடிக்கும் அளவுக்கு அமலாபால் ஒர்த் ஆனவர் இல்லை என்றே ரசிகர்களும் திரையுலகை சேர்ந்த பலரும் கருதுகிறார்கள்..
அதேசமயம் தனுஷின் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருக்கும் அமலாபால், எப்படியும் ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிடுவார் என்று சொல்லப்படும் நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், மிக முக்கியான நபர் ஒருவர் அதற்கு எதிர்ப்பாக உள்ளார் என்றும் புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அந்த நபர் வேறு யாருமில்லை.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே தான் என்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..? இதற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று.. ரஜினி எப்போதுமே திருமண பந்தத்தை மிகவும் புனிதமாக கருதுபவர்.. எந்த நிலையிலும் கணவன் - மனைவி, அதிலும் காதலித்து கரம் பிடித்தவர்கள் திருமண பந்தத்திற்கு உண்டான கண்ணியத்தை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.. தனது சொந்த வாழ்க்கையிலும் அதை கடைபிடித்து வருபவர்.. அதனாலேயே காதலித்து ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்ட ஏ.எல்.விஜய்யயை இரண்டே வருடத்திற்குள் அமலாபால் விவாகரத்து செய்ததை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை..
இரண்டாவது காரணம் நன்றாக குடும்பம் நடத்தும் கணவன்-மனைவிக்குள் இன்னொரு பெண் புகுந்து தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்துவதையும் அவர் எப்போதும் விரும்பியதில்லை.. சொல்லப்போனால் அதற்கு எதிரான மனோபாவம் கொண்டவர். ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தது அமலாபாலின் சொந்த விஷயம் என்றாலும் கூட, அவரது விவாகரத்தின் பின்னணியில் பூதாகரமான காரணமாக கிசுகிசுக்கப்பட்டு வருவது அமலாபாலுக்கும் தனுஷுக்குமான நட்புதான்.
அம்மா கணக்கு படத்தில் அமலாபாலுக்கு முக்கியவம் கொடுத்து, தனுஷ் படம் தயாரித்தபோது கூட கண்டுகொள்ளாத சூப்பர்ஸ்டார், மீண்டும் 'வட சென்னை' படத்தில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததை கண்டு சற்றே அதிர்ச்சியடைந்தாராம்.. இந்த சமயத்தில் அவரும் மகள் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் இருந்தார்கள் என்பதால் அதில் அவரால் தலையிட முடியாமல் போய்விட்டது..
அமெரிக்காவில் இருந்து வந்தபின் தனது மகள்கள், ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருக்கும் வேலை கொடுக்கும் விதமாகவும், அவர்களுக்கான ஒரு லைப் செட்டில்மென்ட் பண்ணும் விதமாகவும் தான், தனுஷின் தயாரிப்பில் நடிக்க சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார் சூப்பர்ஸ்டார்.. விஷயம் இப்படி இருக்க, ரஜினிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை..
பின்குறிப்பு ; தற்போது அமலாபாலுக்கு தமிழ் திரையுலகில் ஒரு அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனின் நட்புக்காக மற்ற தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால் உண்மையில் சூப்பர்ஸ்டாரின் நலம் விரும்பிகளாக உள்ள தயாரிப்பாளர்கள் தான் அவர் கேட்டுக்கொள்ளாமலேயே, அவருக்காக, அவரது மகள் நல்வாழ்க்கைக்காக அமலாபாலுக்கு மறைமுக ரெட் கார்டை அமல்படுத்தி இருக்கிறார்களாம். இதன்மூலம் அவரை கேரளாவுக்கே அனுப்பி வைப்பதுதான் அவர்கள் திட்டமாம். முன்பு ரஜினியை சீண்டினார் என்பதற்காக மனோரமாவையே திரையுலகை விட்டு நம்மவர்கள் ஒதுக்கி வைத்ததும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.