திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பது பலரின் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கும் நிலையில் நாக சைதன்யாவும் எந்த அளவுக்கு நிவின்பாலி கேரக்டருக்கு மரியாதை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக, நிவின்பாலி அளவுக்கு நடிக்காவிட்டாலும் தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துள்ளதாக கூறி ஜகா வாங்கியுள்ளார் நாக சைதன்யா.
மேலும் நிவின்பாலி பற்றி அவர் கூறுகையில், “நிவின்பாலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.. அவரது நடிக்கும் ஸ்டைல் என்பது ஒரு பாடப்புத்தகம் மாதிரி.. குறிப்பாக கல்லூரி மாணவனாக அவர் அந்த கதாபாத்திரத்தை பிரதிபலித்திருந்தது என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டது.. முன்கோபி கேரக்டர்தான் என்றாலும் அதை இயல்பான நகைச்சுவை உணர்வால் அழகாக பேலன்ஸ் செய்திருந்தார். நான் என்னளவுக்கு என்னுடைய ஸ்டைலில் அந்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.