ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஏழாம் அறிவு படத்தை அடுத்து சூர்யா-ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் படம் எஸ்-3. ஹரி இயக்கும் இந்த படம் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என்பதால் முந்தைய படங்களை மிஞ்சும் வகையில் அதிரடியான சண்டை காட்சிகளுடன் இப்படம் தயாராகி வருகிறது. மேலும், தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் எஸ்-3 பட யூனிட் முகாமிட்டுள்ளது.
அங்கு சூர்யா-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாகிறதாம். அதோடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சேஸிங் காட்சியும் படமாகிறதாம். மேலும், இதற்கு முன்பு படப்பிடிப்புகளுக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று வந்துள்ள ஸ்ருதிஹாசன், இதுவரை பாண்டிச்சேரிக்கு ஒருமுறைகூட சென்றதில்லையாம். அந்த வகையில், எஸ்-3 படப்பிடிப்புக்காகத்தான் அவர் முதன்முறையாக பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கிறாராம்.