'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தர்மதுரை' படம் மருத்துவம் மற்றும் மருத்துவர்களை மையமாக வைத்து சமூகத்துக்கு நல்ல கருத்தையும் சொல்லும் படமாக உள்ளது.எனவே இப்படத்தை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்.இயக்குநர் பாலா, இயக்குநர் அமீர், பா.ம.க. நிறுவனம் டாக்டர் ராமதாஸ் உட்பட பலரும் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர்.
தர்மதுரை படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் இயக்குனர் சீனுராமசாமிக்கு 'கிராமத்து பின்னணியில் ஒரு நவீன கதை' என்ற தலைப்பில் ஒரு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.''சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம 'தர்மதுரை'.
விஜய்சேதுபதி எல்லா தரப்பு மக்களின் இதயங்களிலும் இடம் பிடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படிப்பில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஒரு டாக்டரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை திரையில் விரிகிறது.காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் பசி போக்கிய ஏழைச் சிறுவன் மருத்துவ கல்லூரி பேராசிரியராகி காமராஜர் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது நெஞ்சில் நிலைக்கும் காட்சி!
ஏழை மக்களின் வரிப் பணத்தில் படித்து டாக்டரானவர்கள், கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம செய்து நன்றி கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம்!தனக்கு தெரியாமல் தன் கருவை கலைத்த டாக்டர் கணவனை தமன்னா விவாகரத்து செய்வதில் உள்ள நியாயம்.'ஆஸ்பத்திரியில் உங்களை அண்ணான்னு கூப்பிட்டுட்டேன்' வெள்ளந்தியாய் சொன்ன அன்பு செல்வி பூச்சி மருந்து சாப்பிட்டு இறக்கும் சோகம்...
கல்லூரியில் கதை ஆரமபித்த பின் படம் முடியும் வரை அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள்..சீனுராமசாமி வெல்க ராமசாமி...இதுக்கும் மேலே மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்...”என்று அதில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.தர்மதுரை படத்துக்கு பல தரப்பினரிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் பாராட்டில் மகிழ்ந்துபோயிருக்கிறார் சீனுராமசாமி.