'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பேபி படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த படத்திற்கு தற்போது மீரா என பெயரிட்டுள்ளார்களாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சியிடம் மீரா படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மீரா படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். பேபி படத்தில் என் கேரக்டரை பார்த்து விட்டு பலரும், இது மேலும் வளர்ச்சி அடையும் என கருதுவதாக கூறினர். மீரா படத்தில் எனது கேரக்டர், பேபி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மீரா, பேபி படத்தின் தொடர்ச்சியாகவும் அல்லது முடிவாகவோ இருக்கலாம். மீரா படம் பேபி பிரான்சிசின் ஒரு பாகம். ஆனால் இப்படம் தனி படமாக இருக்கும். அதே சமயம் கேரக்டர் அதன் தொடர்ச்சியாக இருக்கும் என்றார். மீரா படத்தை ஷிவம் நாயர் இயக்க உள்ளார். இப்படத்தில் மனோஜ் பாஜ்பேய், பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.