விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
மண்பானையில் வைக்கப்பட்ட மீன் குழம்பையும் இன்னும் பிரசுரம் ஆகாத ஒரு பக்க கதையையும் நம்பி உட்கார்ந்துகொண்டிருந்தால், காலம்தான் கடந்துகொண்டே போகும் என்பதை உணர்ந்த, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பேசாமல் மலையாளத்தில் தனது முதல் படத்தை தொடங்கி விடலாம் என முடிவுக்கு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டார். இந்த முடிவை தனது தந்தையிடம் சொல்ல அவரும், சரி என ஒப்புதல் அளித்ததோடு, மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுகம் வலுவானதாக இருக்கவேண்டும் என்கிற முடிவையும் எடுத்தார்.
அதனால் தான் நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டு முறை நூறு நாள் படங்களாக கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைனை தனது மகன் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டு, விடாப்பிடியாக நின்று ஒப்பந்தமும் செய்துவிட்டார்.. இப்போது இந்தப்பத்திற்கு 'பூமரம்' என பெயர் வைத்துள்ளார்கள். கல்லூரி கேம்பஸை மையமாக வைத்து, சில ஆய்வுப்பணிகள் செய்து இந்தக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் அப்ரிட் ஷைன்.