'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நாகார்ஜூனா, வெங்கடேஷ் என நால்வரின் படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதில் வெற்றி பெறுவது யார் என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். நான்கு படங்களில் இரண்டு படங்கள் தமிழில் வெற்றி பெற்ற கத்தி, இறுதிச்சுற்று படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் கைதி எண் 150 திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான இப்படம் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் கைதி எண் 150 படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார்.
அதே போல் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரும் படத்தின் பூஜை அன்றே அறிவிக்கப்பட்டது. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் நடிகை ஸ்ரேயா நாயகியாக நடிக்கின்றார்.
இவ்விரு படங்களுடன் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜூனாவின் படங்களும் பொங்கல் போட்டியில் சேர்ந்துள்ளன. நாகார்ஜூனா நடித்து வரும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் மாதவன் நடிப்பில் தமிழ் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்கியுள்ள இயக்குனர் சுதா செப்டம்பர் 10ல் சென்னையில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். இறுதிச்சுற்று நாயகியாக நடித்து புகழ் பெற்ற ரித்திகா சிங் தெலுங்கிலும் நாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.