மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முன்னாள் கதாநாயகியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை விமர்ச்சித்து கருத்துக்கள் கூறினார். பவர் ஸ்டார் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆனந்த் எனும் பவன் கல்யாண் ரசிகர்கரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய பவன் கல்யாண் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். இது குறித்து கருத்துக் கூறிய நடிகை ரோஜா, திரைப்படங்களில் மட்டுமே பவன் கல்யாண் கபார் சிங், பொது விஷயங்களில் ரப்பர் சிங்காகவே செயல்படுகிறார் என்று கூறினார். ரோஜாவின் இந்த கருத்திற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டம் தெரிவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜா, ‛‛நான் பவன் கல்யாணை ரப்பர் சிங் என வாழ்த்தியதால் என்னை வாழ்த்த தினமும் பவன் கல்யாண் ரசிகர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்'' என கிண்டலாக ரோஜா கூறியுள்ளார்.