ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இயக்குநர் கரண் ஜோகர், கமல் ரசித் கான் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் இடையே மோதல் விஸ்வரூபமாகியுள்ளது. கரண் ஜோகர், ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்காவை வைத்து ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கியுள்ளார். இதேப்போன்று நடிகர் அஜய் தேவ்கன், தானே நடித்து இயக்கி சிவாய் எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனிடையே கரண் ஜோகர், நடிகரும் விமர்சகருமான கமல் ரசித் கானுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து அஜய்யின் சிவாய் படத்தை தவறாக பேசும்படும் கூறியதாக கூறி யு-டியூப்பில் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டார். இதனால் இவர்கள் இடையேயான மோதல் விஸ்வரூபமாகியுள்ளது. மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக கமல் ரசித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ‛‛அஜய் தேவ்கன் என்னை தப்பானவன் என்று சொல்கிறார். பின்னர் எதற்காக அவர் என்னுடைய பணத்தில் படம் தயாரிக்க வேண்டும். இந்த துறையில் அவருக்கு கொஞ்சம் கூட உணர்ச்சிகளே கிடையாது, அவருக்கு தேவையெல்லாம் பணம் மட்டும் தான். உங்கள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். யாஸ் சோப்ரா இறந்த சமயத்தில் அஜய்-ஷாரூக்கின் படங்களான ‛சன் ஆப் சர்தார்' மற்றும் ‛ஜப் தக் ஹே ஜான்' படங்கள் ரிலீஸாக இருந்தது. யாஸ் சோப்ராவிற்காக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி பலரும் அஜய்யிடம் கேட்டனர், ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை. இதில் நான் பலிகடாவாக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
கமல் இப்படியொரு பிரஸ்மீட் கொடுத்த சில மணிநேரங்களிலேயே அஜய்தேவன் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தார். அதில், ‛‛கரண் ஜோகர் என்ன சொன்னார் என்று அனைவருக்கும் தெரியும். கமல் அளித்துள்ள விளக்கத்தில் முரணாக பேசியிருக்கிறார். அவர் தன்னை மட்டுமே காட்டிக்கொண்டார், அந்த டேப் தொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. நான் கேட்ட ஆடியோவை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள், இதற்கு நீங்கள் தான் ஒரு முடிவு சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் கமல் போன்ற ஒரு மனிதரை பார்த்ததும் கிடையாது, பேசியதும் கிடையாது'' என்று கூறியுளளார்.
இப்படி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.