ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'புலி முருகன்' படம், இதுநாள் வரை மலையாள சினிமாவில் எடுக்கப்படாத வகையில் மெகா பட்ஜெட் பிரமாண்டமான படமாக உருவாகிவருகிறது 'புலி முருகன்' படம். இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முளகுபடம் என்பவர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தற்போது வக்கீல் ஒருவர் இவரை ஏமாற்றி 3 கோடி ரூபாய் மோசடி செய்தது வெளியே தெரியவந்துள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பல நீதிமன்றங்களில் வக்கீலாக பணியாற்றிய சர்வனாதன் என்பவர் தயாரிப்பாளர் தோமிச்சனுடன் நட்பாக பழகிவந்தார். இந்நிலையில் தனக்கு தெரிந்த ஒருவர் 21 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள இடத்தை விற்க விரும்புவதாக கூறி, அதை 3 கோடி ரூபாய் டீலில் முடித்து வைத்தாராம். ஆனால் பின்னர்தான் அது அந்த வக்கீலின் சகோதரர் இடம் என்பதும், தனக்கு விற்றதுபோல, அதே இடத்தை இன்னும் இருவருக்கும் முறைகேடாக விற்றுள்ளார்கள் என்பதும் தோமிச்சனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வக்கீல் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதர மற்றும் சகோதரின் மனைவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் தோமிச்சன் முளகுபடம்.